அன்புச்சூடி


அவள்செயல் விரும்பு
ஆர்வமுடன் செவிசாய்
இன்முகத்தோடு  உதவு
ஈட்டியது பகிர்ந்திடு
உள்ளத்தை கொடுத்துவை
ஊட்டியபின் உண்
எண்ணிநன்கு  பேசு
ஏக்கம் போக்கு
ஐயம் நீக்கு
ஒற்றுமை பேணு
ஓரம் விலகேல்
ஒளவையானாலும் உடனிரு
அஃதே போதும்

   - இல்லற மாமுனி பெரமநாதன்

19/05/2019 அன்று எழுதப்பட்டது