ஹைக்கூ கவிதைகள்


காலத்திற்கும்
கருவை சுமக்கும்
கர்ப்பிணி ...
கவிதை !

மறைந்து இருந்து
பார்க்கும் மர்மம்
என்னவோ ...
பிறை !

காதலும் கானலும்
தோன்ற ஒரே
காரணம் ...
'முழு அக' எதிரொளிப்பு !


இனிப்பான
எச்சில் ...
தேன் !

வா
போ
இரு
காதலே !

(அருகில் வா!
 நெஞ்சுக்குள் போ!
 அங்கேயே இரு!
 என் காதலே!)

28/05/2012 அன்று எழுதப்பட்டது